Uncategorized

ஜாதி மல்லியிலருந்து எஸன்ஸ்

ஜாதி மல்லியிலருந்< எஸன்ஸ் ஜாதி மல்லிப்பூ வருடம் முழுவதும் கிடைக்கக்கூடியது. ஜாதிமல்லியில் வாசனைத் திரவம், வண்ணப்பொருட்கள், தாவரமெழுகு, அல்புமின் ஆகியவை அடங்கியுள்ளன. ஜாதி மல்லியில் கால்பங்கு எஸன்ஸ் உள்ளது.பிரித்தெடுத்தல் எஸன்ஸிற்கு தேவையான பூக்கள் :எஸன்ஸ் தயாரிப்பதற்கு நன்றாக மலர்ந்த பூக்கள் மட்டுமே பயன்படுத்தப்பட வேண்டும். ஜாதிமல்லி பூ மாலை நேரத்தில் மலர்கிறது. நன்கு மலர்ந்த பூக்களை காலை 9.00 மணிக்குள் சுத்தமான கைகளால் பறிக்க வேண்டும். ஏனெனில், வெய்யிலில் பறிக்கப்படும் பூக்களிலிருந்து தயாரிக்கப்படும் எஸன்ஸின் தரமும்,அளவும் குறைவானதாக இருக்கும். பறிக்கப்பட்ட பூக்களை குளிர்ந்த இடத்தில் பாதுகாட்டாகவைத்து, பறிக்கப்பட்டதிலிருந்து சுமார் மூன்று மணி நேரத்திற்குள் பயன்படுத்தி விட வேண்டும். ஹெக்சேன் (Hexane) : இதற்கு நான்கு பகுதிகள் கொண்ட ஒரு இயந்திரம் உள்ளது (அ) பிரித்தெடுக்கும் பகுதி (Extractor) (ஆ) ஆவியாக்கும் பகுதி (Evaporater) (இ) குளிர்விக்கும் பகுதி (Condenser) (ஈ) வெற்றிடத்தில் வாலை வடிக்கும் பகுதி (Vaccum distillation )பிரித்தெடுக்கும் பகுதியானது நன்கு சுழற்றக்கூடியது. இந்த கலனில் 3 கிலோ பூக்களை ஒரே நேரத்தில் பயன்படுத்தலாம். இதில் 3 கிலோ பூவிற்கு 6 லிட்டர் ஹெக்சேனைக் கலந்து கொள்கலனில் போட்டு, கலனின் வாய்ப் பகுதியை நன்றாக மூடி, ஒரு நிமிடத்திற்கு மூன்று சுற்றுகள் வீதம் சுமார் அரைமணி நேரம் சுற்ற வேண்டும். பிறகு 5 நிமிடங்கள் கழித்து பூக்கள் அனைத்தையும், தயார் செய்யப்பட்ட சுத்தமான ஹெக்சேனில் போட்டு 20 நிமிடங்கள் வைத்து விட வேண்டும். அப்பொழுது ஹெக்சேனானது பூக்களில் உள்ள எஸன்ஸ், மெழுகு, நிறமிகள் ஆகியவற்றை உறிஞ்சிக் கொள்ளும். இதில் உள்ள மெழுகு நிறமிகள் ஆகியவற்றை இறுதியில் நீக்கிக் கொள்ளலாம் .பின்னர் எஸன்ஸ் கலந்த இந்த ஹெக்சேனானது பிரித்தெடுக்கும் பகுதியின் அடியில் உள்ள வடிகட்டும் பகுதிவழியாக ஆவியாக்கும் பகுதிக்கு செலுத்தப்படுகிறது. பிரித்தெடுக்கும் பகுதியில் உள்ள பூக்களில் சிறிது ஹெக்சேன் கலந்து இருப்பதால், பூக்களை நன்கு அழுத்தாமல் மெதுவாக அழுத்தி ஆவியாக்கும் பகுதிக்கு அனுப்ப வேண்டும்.

Related

Leave a Comment